"ரூஹ்"என்பதற்கு அரபிமொழியில் உயிர் என்று பொருள். ரூஹூ ரூஹூ என்று கூவுகிற பறவை யொன்றை மலையாள தேசத்து இஸ்லாமிய மக்கள் ரூஹானிக்கிளி என்றழைப்பார்கள்.கிளி என்றால் நமக்குக் கிளி மட்டுமே. அவர்களின் சொற்களில் நம் கிளி அவர்களின் தத்தம்மா அல்லது தத்தா. தத்தை யென்பதே தூயதமிழ்ச்சொல் தான்.மலையாளதேசத்தினர்அவர்களின் பேச்சுவழக்கில் கிளிகளென்பது பறவைகள் என்றே பொருள்தரும். ரூஹானிப் பறவைகளை ரூஹானிக் கிளிகள் என்றழைக்கிற அவர்களிடம் ஏராளமான நம்பிக்கைகளிருந்தன. ஏகப்பட்ட கதைகளிருந்தன. ஆழமான இறைநம்பிக்கையின் பின்னணியுள்ள நாட்டுப்புறப்பாடல்களிருந்தன. ரூஹானிப்பறவைகள் சொர்க்கத்திலிருந்து இறக்கப்பட்டவையென்றும் மரணத்தைக் கொண்டு வருகிற தூதுவனின் அடிமைகளெனவும் மனிதர்களிடத்தே மரணத்தை அறிவிக்கிற பறவைகளெனவும் வாய் வழிக் கதைகளிருக்கின்றன. இந்த ரூஹானிப் பறவைகளின் குரலின் வருகையை, முதலில் காதுற்றவர்கள் சட்டெனப் பிரார்த்தனையைத் தொடங்கி விடுவார்கள். அக்கரையில் நிகழ்கிற மரணத்தை இக்கரையில் அறிவிக்க வந்திருக்கிறதென்று தமக்குள் முணுமுணுத்துக் கொள்வார்கள். ரூஹானிகளின் தனித்த பிரத்யேகமான குரலொன்றை அதன்